×

வண்டல் ஓடை அணையில் புதிதாக கிளை கால்வாய்

வீரவநல்லூர், ஆக. 13:வண்டல் ஓடை நீர்தேக்கத்தில் இருந்து புதிதாக கிளை கால்வாய்  அமைக்க வேண்டும் என முதல்வரிடம் முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.மேற்குத் தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே வண்டல் ஓடை நீர்த்தேக்கம் உள்ளது. இங்கிருந்து மலையான்குளம் பிரிவு மூலமாக மங்கம்மா சாலை வழியாக செவ்வாழை ஓடை, சமந்தான்குளம், ஓனான்குளம், திருவிருத்தான்புள்ளி ஊரணி, வேலியார்குளம், கலியன்குளம், கரிசல்பட்டி குளம், கூட்டாம்புளி குளம் மற்றும் ஆத்தியான்குளம் ஆகிய 9 குளங்களுக்கு தண்ணீர் வரும் வகையில் புதிதாக கிளை கால்வாய் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமியிடம் முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து கால்வாய் தோண்டப்பட வேண்டிய இடத்தை மனோஜ்பாண்டியன்  நேற்று பார்வையிட்டார். இதனிடையே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் இருந்து கங்கனாங்குளம் வரை உள்ள சுமார் 15 கி.மீ. சாலையை செப்பணிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அப்போது ஒன்றியச் செயலாளர்கள் சேரன்மகாதேவி கருத்தபாண்டியன், அம்பாசமுத்திரம் செல்வராஜ், ஒன்றிய துணைச்செயலாளர் கணபதி, ஊராட்சி ஒன்றிய அவைத்தலைவர் சாமுவேல், அண்ணா தொழிற்சங்கம் வேல்பாண்டியன், பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெபராஜ், கோவிந்தபேரி ராமலிங்கம், சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது