×

கோவில்பட்டி பள்ளியில் நூலக உறுப்பினர் சேர்க்கை

கோவில்பட்டி, ஆக. 13: கோவில்பட்டி ஆன்ட்ரூஸ் பள்ளியில் நூலக உறுப்பினர்   சேர்க்கை மற்றும் புத்தகம் வாசிப்பு விழா நடந்தது.  கோவில்பட்டி   வட்டார நூலகம் சார்பில் நடந்த இவ்விழாவுக்கு நூலக   வாசகர் வட்டத் தலைவர் ராசமாணிக்கம் தலைமை வகித்தார். தொழிலதிபர் பிரபாகரன்,   இலக்கிய உலா ரவீந்தர்  முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுப்பிரமணியன்   வரவேற்றார். வட்டார நூலகர் அழகர்சாமி நூலகத்தின் பயன்கள் பற்றி பேசினார்.   நூலக புரவலர் வினோபா, ‘நூல்களை வாசிப்போம், நேசிப்போம்’ என்ற தலைப்பில்   பேசினார். இதையடுத்து வட்டார நூலகத்தில் உறுப்பினராக இணைந்த பள்ளி   மாணவ, மாணவிகள் 20 பேருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மாணவ,   மாணவிகளுக்கு வட்டார நூலகத்தில் இருந்து புத்தகங்கள் வழங்கப்பட்டு வாசிப்பு   பயிற்சி அளிக்கப்பட்டன. ஆசிரியர் அனிதா நன்றி கூறினார்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு