×

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, ஆக. 13: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 16ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக வருகிற 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அன்று காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags :
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்