×

வடக்குவாச் செல்லியம்மன் கோயில் திருவிழா கமலாபுரத்தில் முளைப்பாரி ஊர்வலம்

விளாத்திகுளம், ஆக. 13: விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரத்தில் உள்ள வடக்குவாச் செல்லியம்மன், துர்க்கையம்மன் கோயிலில் பொங்கல் விழா, கடந்த திங்களன்று தொடங்கியது. காலை 10.30 மணிக்கு முத்திபரிதரித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு அக்னிசட்டி எடுத்து  ஊர்வலம் நடைபெற்றது.

மறுநாள் மாலை வடக்குவாச் செல்லியம்மனுக்கு பொங்கலிட்டு அபிஷேக, சிறப்பு பூஜைகளும், இரவு 9 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமும் நடந்தது. புதன்கிழமை காலையில் துர்க்கையம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
மாலை 4 மணிக்கு துர்க்கையம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று தண்ணீரில் கரைத்தனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு