×

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 மாதங்களில் 31 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி, ஆக.13: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் 31 பேர் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பலர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு, திருட்டு ஆகிய குற்றங்களுக்காக இவரையில் 24 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ரேசன் அரிசி கடத்திய ஒருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா