×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2ம் நிலை காவலருக்கான போட்டித்தேர்வில் 935 பேர் தேர்ச்சி

திருவண்ணாமலை, ஆக.13: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ம் நிலை காவல் பணிக்கான போட்டித்தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 538 இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு துறையில் 216 தீயணைப்போர் பணியிடங்கள் மற்றும் பின்னடைவு பணியிடங்கள் 46 உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 140 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

அதையொட்டி இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதற்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நடந்தது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போட்டி தேர்வுக்காக 1,506 பெண்கள் உட்பட 10,594 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 9,523 பேர் தேர்வு எழுதியதில் 935 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...