×

ஆந்திரா செல்லும் ரயில்களில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணம்,ஆக.13: அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக ஆந்திரா செல்லும் ரயில்களில், ஒரு சிலர் ரேஷன் அரிசியை அடிக்கடி கடத்தி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமையில் ஊழியர்கள் நேற்று சென்னையில் இருந்து திருப்பதிக்கும், புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது ரயிலில் சீட்டிற்கு அடியில் ஆங்காங்கே ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசியை யார்? கடத்தி வந்தார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை அரக்கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...