×

மணல் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல் 9 பேர் கைது

ஆற்காடு, ஆக. 13: ஆற்காடு அடுத்த கலவை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், கோடாலி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை நிறுத்தினர். இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, அதனை ஓட்டிவந்த கவுசிக் பாலாஜி(22) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய பிரகாசம் என்பவரை தேடி வருகின்றனர்.

அதேபோல் ஆற்காடு அடுத்த வாழப்பந்தல் பகுதியில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கமண்டல நாகநதியில் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டர் மற்றும் 8 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ஆரணி தாலுகா பையூரைச் சேர்ந்த சிவக்குமார்(17), ராமமூர்த்தி(46), ஏழுமலை(55), தவமணி(23), வித்தயகுமார்(22), சிவக்குமார்(20), அஜீத்(19), பாலாஜி(22), ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...