×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஆற்காடு, ஆக. 13: ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பாலாற்றில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளி செல்வதாக தாசில்தார் சுமதிக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், விஏஓ ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து ஆற்காடு தாலுகா போலீசில் ஒப்படைத்து, தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்