×

போலீஸ் நிலையம் அருகே உள்ள கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

ஆம்பூர், ஆக. 13: ஆம்பூர் போலீஸ் நிலையம் அருகே அரச மரத்தடியில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது.இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்கு தர்மகர்த்தா ராமமூர்த்தி சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ராமமூர்த்தி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்து வருகின்றனர். ஆம்பூரில் தொடர்ந்து கோயில்களில் உண்டியல் திருட்டு நடந்து வருவதும் போலீஸ் நிலையம் அருகிலேயே உள்ள ஒரு கோயிலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்திருப்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது கே.வி.குப்பம் அருகே