கும்பகோணம், ஆக. 9: திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவால் நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார். இதனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை டிவியில் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது நண்பகல் 11 மணியில் இருந்து 12.10 மணி வரை சூரியனை சுற்றி பளிச்சென ஒளி வீசியது. இதைதொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் சூரியனை சுற்றி 3 நிறங்களில் திடீரென ஒளிவட்டம் தோன்றியது. இதன் அளவு வட்ட வடிவமாக காணப்பட்டது. அதன் நிறங்களும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக காணப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி சூரியனே அஞ்சலி செலுத்தியதாக மக்கள் தெரிவித்தனர்.10,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவால் நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார். இதனால் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை.