×

தீ விபத்தில் தொழிலாளி பலி

விருதுநகர், ஆக 9: விருதுநகர் அருகே மேலஆமத்தூர் பகுதியில், அலுமினியப் பவுடர் அரைக்கும் தொழிற்சாலை உள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த ஆலையில், பவாலியைச் சேர்ந்த  கண்ணன் (27) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிகளை முடித்துவிட்டு தொழிற்சாலையில் தூங்கியுள்ளார். அப்போது தொழிற்சாலையில் மின்கசிவால் தீப்பிடித்துள்ளது. இதில், சிக்கிய கண்ணன் சம்பவ இடத்திலேயே, படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வறுமை ஒழிப்பு திட்டத்தில் மோசடி விருதுநகர், ஆக. 9: விருதுநகர் அருகே, கன்னிச்சேரி புதூரைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. வாடியூர் மகளிர் குழு பொறுப்பாளராக இருந்த இவர், மகளிர் சுய உதவிக்குழு நிதி மற்றும் வறுமை ஒழிப்பு நிதியில் ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் தெய்வேந்திரன் கொடுத்த புகாரின்பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்