×

வேலூர் மாவட்டத்தில் நீதிமன்ற காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் 12, 17ம் தேதிக்கு மாற்றம்

வேலூர், ஆக.9: வேலூர் மாவட்டத்தில் 8 மற்றும் 11ம் தேதிகளில் நடக்க இருந்த நீதிமன்ற காலி பணியிடங்களுக்கான தேர்வு வரும் 12, 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட நீதிமன்றங்களில் தட்டச்சர், கணினி ஆபரேட்டர்கள் ஆகிய காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு வேலூர் நீதிமன்றத்தில் நேற்று(8ம்தேதி) நடக்க இருந்தது. இந்த தேர்வு வரும் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 11ம் தேதி நடக்க இருந்தது. அன்றைய தினம் வேலைநாளாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே அன்று நடக்க இருந்த தேர்வு வரும் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...