×

முட்டைகளை விழுங்கிய பாம்பு

புதுச்சேரி, ஆக. 9: கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் கோழி பண்ணையில் அடைகாக்க வைத்திருந்த கோழி முட்டைகள் கடந்த சில நாட்களாக மாயமாகின. நேற்று முன்தினம் பண்ணை காவலாளி இதனை கண்காணித்தபோது, 5 அடி நீள நல்லபாம்பு ஒன்று முட்டைகளை விழுங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் பாம்பை பிடிக்க பயந்ததால், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர் பாம்பை பிடிக்க முன்வந்தார். அவர் நல்லபாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை மூர்த்திகுப்பத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...