×

புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து

கோவை, ஆக. 7: சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (42). கைத்தறி சேலை தயாரிப்பாளர். இவர் நேற்று தொழில் விசயமாக கோவை மாவட்டம் அன்னூர் செல்வதற்காக சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். காரை டிரைவர் தரணி (23) ஒட்டினார். காரில் சண்முகத்தின் மனைவி மேகலா (35), சகோதரர் ஈஸ்வரன் (45) ஆகியோர் உடனிருந்தனர். கார் விண்ணப்பள்ளி மறுவாழ்வு இல்லம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.   இந்த விபத்தில் காரிலிருந்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் சண்முகத்திற்கு தலையில் அடிபட்டதால், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை, ஆக. 7: சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (42). கைத்தறி சேலை தயாரிப்பாளர். இவர் நேற்று தொழில் விசயமாக கோவை மாவட்டம் அன்னூர் செல்வதற்காக சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். காரை டிரைவர் தரணி (23) ஒட்டினார். காரில் சண்முகத்தின் மனைவி மேகலா (35), சகோதரர் ஈஸ்வரன் (45) ஆகியோர் உடனிருந்தனர். கார் விண்ணப்பள்ளி மறுவாழ்வு இல்லம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.   இந்த விபத்தில் காரிலிருந்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் சண்முகத்திற்கு தலையில் அடிபட்டதால், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை, ஆக.7: கோவை பூமார்க்கெட் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்த முரளி என்பவர்  மகன் ரஞ்சித்குமார் (17). ஒர்க்ஷாப் தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் பேரூர் பெரியகுளத்தில் குளித்து கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத நிலையில் இவர், குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கி இறந்தார். பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்