×

லாரி மீது வேன் மோதி பெண் பலி

பவானி, ஆக. 7:  தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு வேனில் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்னர் வேனை பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (25) ஓட்டினார்.
 வேன் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு கோணவாய்க்கால் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் நின்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.இதில், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த கோபால் மனைவி ஞானம் (50), டிரைவர் மணிகண்டன் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். இதில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஞானம் உயிரிழந்தார். படுகாயமைடந்த 6 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு