×

அகில இந்திய காற்றாலை சங்க தலைவராக கஸ்தூரி ரங்கையன் மீண்டும் தேர்வு

கோவை, ஆக.7: அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக கோவையை சேர்ந்த  கஸ்தூரி ரங்கையன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 22வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கோவையை சேர்ந்த கஸ்தூரி ரங்கையன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  தேர்வு செய்யப்பட்ட மற்ற நிர்வாகிகள் விபரம் வருமாறு: துணை தலைவர்கள் சமந்த் (மும்பை), குப்தா (கல்கத்தா), செயலாளர் கண்ணன் (சென்னை), பொருளாளர் ராஜா சுகுமார் (சென்னை), மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன் (கோவை), பாபு (திருப்பூர்), செங்குட்டுவன் (ஈரோடு), பாலசந்திரன் (கரூர்), கிருஷ்ணன் (சென்னை), பபேஸ்வர் ராவ், மெல்ராய் தழுப்பில் ரபெல், ராஜசேகர் புதாவரப்பு, ரவிகுமார் ரெட்டி (ஹைதராபாத்),  பல்ராம் மேத்தா (குர்கான்), அனில் சாபு, சந்திர சேகர் குண்டேட்டா (ஜெய்பூர்), சுரேஷ் சந்த் கோயல், நாயர் (டெல்லி), காமத், கருணாமூர்த்தி (மும்பை), கரந்த், ரெட்டி (பெங்களூர்), மகேஷ் விப்ரதாஸ் (குருக்ராம்), சந்தோஷ் டுபெ (புனே), சுப்ரமணியம் (கோஸ்பெட்), வெங்கடேஷ் (நாசிக்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்