×

சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில் பேஷன் கிளப் துவக்கம்

ஈரோடு,  ஆக. 7:    ஈரோடு கரூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் கடந்த 1ம்  தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழனிசாமி (45) என்பவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார்.இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு  செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.இதனிடையே இறந்த பழனிசாமி எந்த ஊர், உறவினர்கள் யார் என  எவ்வித விபரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இறந்து போன  பழனிசாமி குறித்த தகவல் கிடைத்தால் 0424-2500225 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளலாம் என்று மொடக்குறிச்சி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்