×

செங்கோட்டை அருகே வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது

செங்கோட்டை, ஆக.7:  செங்கோட்டை அருகே வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.செங்கோட்டையை அடுத்துள்ள பூலங்குடியிருப்பு மண்டப தெருவை சேர்ந்தவர் இசக்கி மனைவி திருமலையம்மாள் (51). இவர் கடந்த மார்ச் 8ம் தேதி வீட்டில் தனியாக இரவில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் பீரோவை திறந்து ரூ ஒரு லட்சத்தை கொள்ளையடித்தார். இதனை பார்த்து கூச்சலிட்ட திருமலையம்மாளின் கழுத்தை அரிவாள்மனையாள் அறுத்ததோடு அவரது தலையிலும் பலமாக தாக்கி விட்டு மர்மநபர் தப்பிச்சென்றார்.

இதுகுறித்து செங்கோட்டை காவல்ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி ,கிருஷ்ணன், தனிப்பிரிவு எட்டு முத்துராஜ் ,தலைமை காவலர் இதயத்துல்லா ஆகியோர் குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சிந்தாமணி மகன் சுப்பிரமணி (எ)ஜெமினி (30) என்பவர் பணத்தை திருடி திருமலையம்மாளை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. சுப்பிரமணியை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவருக்கு வேறு ஏதாவது கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்