×

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் பவித்ேராத்ஸவம்

நெல்லை, ஆக.7: கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் பவித்ேராத்ஸவ வைபவம் ஆக. 9ல் துவங்குகிறது. கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் பவித்ேராத்ஸவ வைபவம் வரும் 9ம்தேதி தொடங்குகிறது.  மாலை 6.30 மணிக்கு புண்யாகவாசனம், பகவத் பிரார்த்தனை, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

10ம்தேதி காலை 7.00மணிக்கு புண்யாகவாசனம், விசேஷ திருமஞ்சனம், பவித்ரமாலை, பிரதிஷ்டை, வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 11ம்தேதி காலை 6மணிக்கு புண்யாகவாசனம், விசேஷ திருமஞ்சனம், பவித்ேராத்ஸவ ஹோமம், பூர்ணாகுதி, பெருமாள், விஷ்வக்சேனர், கருடாழ்வார் ஆகியோருக்கு பவித்ரமாலை, சமர்ப்பணம், விசேஷ திருவாராதனம், பிரசாதம் வழங்குதல நடக்கிறது. மாலை 6மணிக்கு சுவாமி வீதியுலா, தீபாராதனை, பவித்ரமாலை பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், ரவி பட்டாச்சாரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது