×

நாலாட்டின்புதூர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கோவில்பட்டி, ஆக. 7: கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.  பள்ளி முதல்வர் அமிர்தராஜன் தலைமை வகித்தார். டெங்கு உருவாகும் விதம், அதன் விளைவுகள், தடுக்கவேண்டிய வழிமுறை மற்றும் முன்ச்சரிக்கை உள்ளிட்டவை குறித்து கோவில்பட்டி அரசு மருத்துவர் டாக்டர் ராமமூர்த்தி, கீழஈரால் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி கருணாநிதி, வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி சின்னத்தம்பி உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். முகாமில் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள், ம் ஆசிரியர்கள், பங்குத்தந்தை மரியஜான் பிராங்கிளின் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்