×

சட்ட விழிப்புணர்வு முகாம்

நாசரேத், ஆக. 7:  நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில்  சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.  மாணவர்களுக்கான கேலிவதை தடுப்பு குறித்து தூத்துக்குடி  சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்  நடந்த இம்முகாமுக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கல்லூரித் தாளாளர் சசிகரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். முகாமில் வக்கீல்கள் ரகுபத்மன், முத்தலிங்கம், மணிகண்டன், ஜெயச்சந்திரிகா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு