×

அரியலூரில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரியலூர், ஆக. 3:  அரியலூர் மாவட்டம்  திருமானூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்  ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்களுக்கும் பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்  சாந்திராணி துவக்கி  வைத்து கல்வி தொழில்நுட்பத்தை மாணவர்கள் நன்று  பயன்படுத்த ஆசிரியர்கள் சிறப்பாக பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்
என்றார்.பயிற்சியில்  கற்றல், கற்பித்தல், செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலியான  திக்க்ஷா கல்வி வீடியோக்கள்  மூலம் விரைவு குலங்கல் குறியீடு, இஎம்ஐஎஸ்  போன்ற செயலிகள் குறித்து விரிவான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும்  புதிய பாடபுத்தகத்துக்கேற்ப டேப்ஐ பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம்  அளிக்கப்பட்டது. இதில் 133 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்  பயிற்றுநர்கள் அண்ணாமலை, பொன்மலர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை  வட்டார வளமைய மேற்பார்வையாளர் அமுதா பார்வையிட்டார்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...