×

குடிக்க பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

அரியலூர், ஆக. 2: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் தங்கத்தமிழன் (25), விவசாயி. இவர்  அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (34)   கனகராஜ் (33)   ஆகியோர் ஒன்று சேர்ந்து  தங்கத்தமிழனிடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர். அப்போது தங்கத்தமிழன் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  வடிவேலு  மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றுசேர்ந்து திட்டி தாக்கி   கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  

இது குறித்து தங்கத்தமிழன் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்.  2 பேர் மீதும் வழக்குப்பதிந்து வடிவேல், கனகராஜ் ஆகியோரை கைது செய்து   விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...