அரியலூர், ஆக. 2: திருமானூர் அருகே சாலையோரத்தில் உள்ள பாலத்தில் பைக் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(45). விவசாய தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் ஏலாக்குறிச்சியில் இருந்து கோவிலூர் நோக்கி சென்றார். புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தின் சுவற்றில் பைக் மோதியது. இதில் காயமடைந்த ராமலிங்கம், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.