×

பள்ளி விடுதியில் தங்கி படித்த பத்தாம் வகுப்பு மாணவி மாயம்

நாகர்கோவில், ஜூன் 21:  மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சிஜின் (20). அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை சிஜின் பாலியல் பலாத்காரம் செய்ததாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அந்த மாணவியை நாகர்கோவிலில் விடுதி வசதியுடன் கூடிய ஒரு பள்ளியில் சேர்த்து 10ம் வகுப்பு படிக்க வைத்தனர். இந்நிலையில், மாணவி கடந்த 2 தினங்களுக்கு முன் திடீரென மாயமானார். இது குறித்து  மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிஜின் மற்றும் மாணவியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு