×

35 பேர் கைது ஓய்வூதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதிய நல சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜூன் 21:  தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம் சார்பில் நேற்று  ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் வழங்கியதுபோல,பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கும் 2017 ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர்  தனபாலன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர்  சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாநில அமைப்புச் செயலர்  தங்கையன், மாவட்ட இணைச் செயலர் அய்யனார், பொருளாளர் சீனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு