×

தஞ்சையில் காய்கறி வியாபாரியை வெட்டிய 4 பேருக்கு வலை

தஞ்சை,ஜூன்21: தஞ்சையில் காய்கறி வியாபாரியை அரிவாளால் வெட்டிய 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் அரவிந்த்(27). இவர் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காய்கறிகள் வியாபாரம் செய்ய அரவிந்த் மார்க்கெட்டிற்கு வந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் 2 பைக்கில் வந்து அரவிந்த்தை கை மற்றும் தலை பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பலத்த காயத்துடன் கீழே விழுந்த அரவிந்த் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த் மீது தாக்குதல் நடத்தியது யார்? எதற்காக தாக்கினர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்ணை கிண்டல் ெசய்தவருக்கு அடி-உதை :  கும்பகோணத்தில் இளம்பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் உள்பட இரு பெண்களுக்கு அடி உதை விழுந்தது. இதிலு இருவரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் அடுத்த மாத்தி வடக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார்(42) மகன் சூரியகுமார். அதே பகுதியிலுள்ள பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது பூமிநாதனின் அண்ணன் அயோத்தி மகள் சத்யா, அவ்வழியாக சென்ற போது, சூரியகுமார் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது சகோதர்களான சக்திவேல் மற்றும் செல்வகுமாரிடம் சத்யா தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பூமிநாதன்(43), உறவினர்கள் சக்திவேல்(23), செல்வகுமார், அயோத்தி, தினேஷ் ஆகிய 5 பேரும் விஜயகுமார் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.

அப்போது ஆத்திரமடைந்த 5 பேரும் உருட்டுக்கட்டையால் சூரியகுமார், இவரது உறவினர்களான குணால் மற்றும் ஜெயமாலா ஆகிய மூவரையும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து விஜயகுமார், பட்டீஸ்வரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் பூமிநாதன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். தப்யோடிய செல்வகுமார், அயோத்தி, தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். ஒயர் திருடிய வாலிபர் கைது:   சேதுபாவாசத்திரம் அடுத்த சின்னமனையை சேர்ந்தவர் வீரப்பன்(57). இவர் இரண்டாம்புளிக்காடு பகுதியில் இரால் பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணையில் அடிக்கடி மோட்டார் மின் ஒயர் திருடு போது. இதனால் அவர் கண்காணித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதேபோல் மின் ஒயரை திருடும்போது பட்டுக்கோட்டை தாலுகா மன்னங்காடு துவரங்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம் (30) என்பவர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை சேதுபாவாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். ேமலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

கும்பகோணத்தில் சொத்து தராததால் தந்தை அண்ணனுக்கு அடி : கும்பகோணம் அடுத்த கொத்தங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு சந்திரகாசன் (53), ராஜாங்கம் (40) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜாங்கம் தனது தந்தை ரங்கநாதனிடம் சொத்தில் தனது பங்கை பிரித்துத்தருமாறு தகராறு செய்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரங்கநாதனின் மூத்த மகன் சந்திரகாசன் தகராறை தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாங்கம் தந்தை ரங்கநாதன் மற்றும் அண்ணன் சந்திரகாசன் ஆகியோரை அருகிலிருந்த உருட்டுகட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சந்திரகாசன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் ராஜாங்கத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...