×

தஞ்சையில் செயற்கைகால் பொருத்த அளவெடுக்கும் முகாம்

தஞ்சை,ஜூன்21:  மாற்று திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ப்ரீடம் அறக்கட்டளை சார்பில் இலவச செயற்கை கால் அளவெடுக்கும் முகாம் தஞ்சை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை முகாமை தொடங்கி வைத்தார். நேற்று, இன்று இரண்டு நாட்கள் நடக்கும் இலவச முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை கால் பொருத்துவதற்காக அளவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அளவு எடுத்த பின் அந்த அளவின் அடிப்படையில் செயற்கை கால் தயார் செய்யப்பட்டு 1 மாத காலத்தில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கப்படும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் பொதுமக்களிடம் கத்தியை...