×

கும்பகோணம் தபால் நிலையத்தில் வெளி நாடுகளுக்கு தபால் அனுப்ப சிறப்பு கவுண்டர்

கும்பகோணம், ஜூன் 21:  கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் வெளிநாடுகளுக்கு பதிவு தபால், பதிவு பார்சல்கள், விரைவு தபால் அனுப்புவதற்கான சிறப்பு கவுண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கும்பகோணம் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் துரைசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வெளிநாடுகளுக்கு பார்சல், விரைவு தபால்களை சிரமமின்றி பொதுமக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்புவதற்கான சிறப்பு கவுண்டர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளுக்கு பேக்கிங் செய்வதற்கு கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு பார்சல் சர்வீஸ் சென்டர் இயங்கி வருகிறது.

அனுப்புவதற்கு அனுப்ப வேண்டிய பொருட்களை தபால் நிலையத்திற்கு எடுத்து வந்தால் மட்டும் போதும். அதற்காக நியமிக்கப்பட்டுள்ள தபால் நிலைய ஊழியர்கள் பொருட்களை பேக்கிங் செய்வதற்கு கட்டணம் பெற்றுக் கொண்டு பேக்கிங் செய்து கொடுத்து விடுவார்கள். மேலும் தபால் துறையின் மூலம் அனுப்பப்படும் தபால் மற்றும் பார்சலின் பட்டுவாடா நிலையை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த சேவையை அனைத்து பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...