×

அம்மாபேட்டை அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தீயில் ரூ.1.58 லட்சம் மதுபானம் சேதம்

தஞ்சை, ஜூன்21: அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.58 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் சேதம் அடைந்தது.அம்மாபேட்டை அருகே செண்பகபுரத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையில் மேற்பார்வையாளராக கருணாநிதி பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் விற்பனை முடிந்தவுடன் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை கடையின் பின்பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் கடையின் மேற்பார்வையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது கடையின் உட்பகுதியில் தீப்பிடித்து அட்டைபெட்டியில் இருந்த மதுபானங்கள் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.58 லட்சமாகும். இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...