×

அக்கரைக்குளம் மேம்படுத்தும் பணி ஆய்வு

நாகை, ஜூன் 21: நாகை நகராட்சி அக்கரைக்குளத்தில் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.3.15 கோடி மதிப்பில் அக்கரைக்குளத்தை மேம்படுத்தும் பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். பின்னர் தாமரைக்குளத்தை ரூ.1.25 கோடி மதிப்பில் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டார். மேலும் செல்லூர் சாலையில் ரூ.9.60 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை சீரமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...