×

அமைச்சர் வேண்டுகோள் வாணகிரியில் காவிரி ஆற்றின் முகத்துவாரம் தூர்வார விரைந்து நடவடிக்கை முதல்வர் உறுதியளித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சீர்காழி, ஜூன் 21: சீர்காழி அருகே வாணகிரியில் காவிரி ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதால் விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சீர்காழி அருகே வாணகிரியில் காவிரி ஆறு, பூம்புகார் கடலில் கலக்கும் இடத்தில் முகத்துவாரம் தூர்ந்துவிட்டது. இதனால் காவிரியில் இருந்து செல்லும் தண்ணீர் கடலில் கலப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் படகுகளை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே முகத்துவாரத்தை தூர்வார வேண்டுமென மீனவர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து மயிலாடுதுறைக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் தெரிவித்தார். அப்போது பூம்புகாரில் கடலில் கலக்கும் காவிரி ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனால் பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது