×

வேதாரண்யத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த 10 பேர் முகாமுக்கு அனுப்பி வைப்பு

வேதாரண்யம், ஜூன் 21: வேதாரண்யம் பகுதியில் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த 10 பேரை பிடித்து முகாமுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.வேதாரண்யம் நகரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் அரைகுறை ஆடையுடன் சுற்றி வந்தனர். மேலும் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து பொதுமக்கள் மீது எரிந்து வந்தனர். இதுகுறித்து நாகை கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு கோரிக்கை மனு அனுப்பினார். அதில் வேதாரண்யம் பகுதியில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.  

    இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பிடித்து முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளி பிரிவு அதிகாரிகள், சீர்காழி கார்டன் சைக்காடியன் மையத்தினர் இணைந்து வேதாரண்யத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த 8 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 10 பேரை பிடித்து சீர்காழி மையத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்