×

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், ஜூன் 21: பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் திருச்சி, புதுக்கோட்டை கோட்ட பொறியாளர்களை கண்டித்து வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலை பணியாளர் சங்க நிர்வாகி மாரிமுத்து தலைமை வகித்தார். சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், உட்கோட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் முனுசாமி பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் விடுப்பு விதிகளுக்கு முரணாக ஊதிய பிடித்தம் செய்த உதவி கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.


Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...