×

காலாப்பட்டு அருகே வீடு புகுந்து முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2பேருக்கு வலை

காலாப்பட்டு, ஜூன் 21: காலாப்பட்டு அருகே முதியவருக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காலாப்பட்டு அடுத்த சின்னகாலாப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் நடராஜன் (65), தனியார் நிறுவன உரிமையாளர். நேற்று முன்தினம் மாலை இவர், குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது 2 பேர் அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். நடராஜன் கதவை திறந்தபோது, அவர்கள் உங்கள் மகனை கூப்பிடுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு நடராஜன் எனது மகன் வெளியே சென்றிருக்கிறார் என கூறியுள்ளார். உடனே இருவரும் அவரது செல்போன் நம்பரை கொடுங்கள், நாங்கள் ேபச வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் நடராஜன், நம்பர் இல்லை, நீங்கள் பிறகு வாருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே செல்ல முயன்றுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் இருவரும், வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த காலிங்பெல் சுவிட்ச் பாக்சை உடைத்து, நடராஜனிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி நடராஜன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்ெபக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், முதியவருக்கு கொலைமிரட்டல் விடுத்தது சின்னமுதலியார்சாவடியை சேர்ந்த மணவளவனும், அவரது நண்பரும் என தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...