புதுச்சேரி, ஜூன் 21: பிஎஸ்என்எல் ஓய்வூதிய நலச்சங்கத்தினர் புதுவையில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்ட
னர். 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மாற்றம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்துக்கு சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் அன்பழகன், சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், வைத்திலிங்கம், சதாசிவம், சாம்பசிவம் ஆகியோர் கண்டன உரையாற்றி
னர். தர்ணா முடிவில் மத்திய தொலைதொடர்பு அமைச்சர், செயலருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.