×

சேத்தியாத்தோப்பு கடைவீதியில்

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு
சேத்தியாத்தோப்பு, ஜூன் 21:  சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோடு கடைவீதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நடந்து செல்வோர் பெரும் அவதியடைந்து வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளில் உள்ள மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் சைக்கிளில் செல்வோரும் மழைநீர் தேங்கியுள்ள குழியில் விழுந்து காயமடைகின்றனர்.இந்த சாலை வழியாகத்தான் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். இதனருகே உணவகங்களும் உள்ளது. எனவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் இந்த மழைநீர் தேங்கியுள்ள குழியை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது