×

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி பலாத்காரம்.

உளுந்தூர்பேட்டை, ஜூன் 21: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் 14 வயது மகள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று பூவரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த மண்ணுசாமி மகன் ராமச்சந்திரன்(38) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு