×

மணல் கடத்திய வாலிபர் கைது

விருத்தாசலம், ஜூன் 21: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பிஞ்சனூர் பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் இலங்கியனூர் அருகே உள்ள
மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் மங்கலம்பேட்டை காவல்
நிலையம் கொண்டு சென்றனர். லாரியை ஓட்டி வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தக்காவை சேர்ந்த தேவராஜ் மகன் வெங்கடேசன், மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் சுரேஷ் மற்றும் சீரப்பன் மகன் பாண்டியன் (35) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.

Tags :
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...