×

சரக்கு வாகனம் மோதி விவசாயி பலி

முஷ்ணம், ஜூன் 21: முஷ்ணம் அருகே வானமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(42), விவசாயி. இவருக்கு இரண்டு பெண், ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சோழதரத்திற்கு காய்கறி வாங்க வந்துள்ளார். அப்போது கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து பழனிவேல் மனைவி சித்ரா சோழதரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்