×

கார் மோதி நடத்துனர் பலி

உளுந்தூர்பேட்டை, ஜூன் 21:  உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் சிவக்குமார்(50). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை ஒரு பைக்கில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து எறஞ்சி கிராமத்திற்கு வந்துள்ளார். அந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக பின்னால் தஞ்சாவூரில் இருந்து வந்த கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி