×

பைக் திருடிய வாலிபர் கைது

சிதம்பரம், ஜூன் 21: சிதம்பரம் காந்தி சிலை அருகே டவுன் குற்றப்
பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் எழுதாத பைக்கில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிதம்பரம் ஓடக்கார தெருவை சேர்ந்த நடராஜ் மகன் மணிண்டன்(எ) மணி (19) என்பதும், சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்