×

விஷவண்டு கடித்து முதியவர் பரிதாப சாவு

சிதம்பரம், ஜூன் 21: சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (90). இவர் சம்பவத்தன்று கவரப்பட்டு படுகை ஆற்று கரையில் மாமரத்தில் மாங்காய் பறித்துள்ளார். அப்போது மரத்தில் இருந்த கூடு கலைந்து கதண்டு வண்டுகள் அவரை கடித்தன. இதில் பாதிக்கப்பட்ட ரங்கசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி நாயகம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்