×

மாட்டு வண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி, ஜூன் 21: பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி பல்வேறு காலகட்டத்தில் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இருப்பினும் தொடர்ந்து மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. இதனிடையே எஸ்பி விஜயகுமார் ஆலோசனையின்பேரில் மணல் திருட்டை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.அவர்கள் காடாம்புலியூர் பகுதியில் நேற்று சோதனையிட்டபோது மாளிகம்பட்டு கெடிலம் ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்த காடாம்புலியூரை
சேர்ந்த சாரதி(57), சிவக்குமார் (40), தண்டபாணி (48), கண்ணுசாமி, சாரங்கம் உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்