×

மனைவி மாயம் கணவர் புகார்

முஷ்ணம், ஜூன் 21: முஷ்ணம் அருகே பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி(24). இவர் வைஷ்ணவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். டந்த 7ம்தேதி வைஷ்ணவி(21), மாமியார் சகுந்தலா ஆகியோர் முஷ்ணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் வெளியே வந்த சகுந்தலா மருமகள் வைஷ்ணவியை தேடினார். ஆனால் அங்கு அவர் இல்லை. இது குறித்து மகனிடம் கூறினார். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் முஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது