×

ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஜூன் 21: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமய்யா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மாதையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பேபி, சேகர், சுந்தரவள்ளி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா