×

புளுதியூர் சந்தையில் ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், ஜூன் 21: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில் ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன் கிழமை நாட்களில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 270க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இதில் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் ₹22 முதல் ₹40ஆயிரம் வரையும், ஆடு ₹2,750 முதல் ₹7,550 வரையும் விற்பனையானது. மொத்தம் ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா