×

ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

ஓசூர், ஜூன் 21: ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. இந்த ஆறானது ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி செல்கிறது. நேற்று மாலை ஆற்றில் ஆண் சடலம் மிதந்து வருவதாக ஓசூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 அந்த சடலத்தை மீட்டபோது வலது கையில் சம்பத் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பின்னர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அதை போலீசார் அனுப்பி வைத்தனர். ஆற்றில் சடலமாக மிதந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எவ்வாறு ஆற்றில் அடித்து வரப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது