×

அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பயணச்சீட்டு இயந்திரங்களை தரமானதாக வழங்க வேண்டும்

தர்மபுரி, ஜூன் 21: அரசு பேருந்து நடத்துனர்களுக்கு, தரமான பயண சீட்டு இயந்திரம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழகத் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.  தமிழ்நாடு ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க, மண்டல நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட பொருளாளர் ரவி தலைமையில் தர்மபுரியில் நடந்தது. சம்மேளன பொது செயலாளர் லட்சுமணன், மண்டல பொது செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், தொழிலாளர்களுக்கான அரியர்ஸ் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். விபத்தில்லாமல் பஸ்களை ஓட்டிய டிரைவர்களுக்கு வெகுமதி வழங்க வேண்டும். பணிமனைகளில் உள்ள ஓய்வறைகள் சரியான முறையில் பராமரிப்பு செய்யாததால், மூட்டை பூச்சிகள் அதிக அளவில் உள்ளது. இதனால் ஓய்வு எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் சிரம படுகின்றனர்.

 எனவே, ஓய்வறைகளை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடத்துநர்களுக்கு வழங்கப்படும், பயண சீட்டு இயந்திரங்களை தரமானதாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சீருடை மற்றும் காலணிகளை விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் ஆண்டு பேரவையை வரும் ஆகஸ்ட் மாதம் ஊத்தங்கரையில் நடத்தவும், சம்மேளனத்தின் மாநில மாநாட்டை தர்மபுரியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது